அக்னீஸ்வரர் சிவன் கோவிலில் தூய்மைப் பணி - ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை அருகே உள்ள அக்னீஸ்வரர் சிவன் கோவிலை ஏராளமான மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள அக்னீஸ்வரர் சிவன் கோவிலை ஏராளமான மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோவில், மரம், செடி கொடிகள் முளைத்தும் புதர் மண்டியும் கிடந்தது. இதனையடுத்து, கோமல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கோவிலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, செடி கொடிகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டதை, கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story