நகைக்கடையில் வெள்ளி கொலுசுகளை திருடிய 2 பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி நகைக்கடையில் கொலுசு திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நகைக்கடையில் வெள்ளி கொலுசுகளை திருடிய  2 பெண்கள் கைது
x
திருச்சி மாவட்டம், முசிறி நகைக்கடையில் கொலுசு  திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு தடுப்பு போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2 பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரிடமும் நடத்திய சோதனையில், 15 ஜோடி வெள்ளி கொலுசுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவர் கந்தர்வகோட்டையை சேர்ந்த ராணி, என்பதும் மற்றொருவர் தஞ்சாவூரை சேர்ந்த சாந்தி என்பதும் தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்