மாணவர்களை மிரட்டி 9 செல்போன்களை பறித்து சென்ற மர்ம கும்பல் - 3 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அனீஷ்ராஜ் சென்னை ராமாபுரத்தில் தங்கி பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
மாணவர்களை மிரட்டி 9 செல்போன்களை பறித்து சென்ற மர்ம கும்பல் - 3 பேர் கைது
x
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அனீஷ்ராஜ்,சென்னை ராமாபுரத்தில் தங்கி, பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவரையும் இவர் நண்பர்களையும் மிரட்டி மர்ம நபர்கள்  9 செல்போன்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக அவர்கள் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 9 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்