வங்கியில் வேலைவாங்கி தருவதாக கோடிகளில் மோசடி - 40 பேரிடம் ரூ. 2 கோடி வசூலித்தவர் தலைமறைவு

வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் தலைமறைவானார்.
வங்கியில் வேலைவாங்கி தருவதாக கோடிகளில் மோசடி - 40 பேரிடம் ரூ. 2 கோடி வசூலித்தவர் தலைமறைவு
x
வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம், 2 கோடி ரூபாய் மோசடி செய்த, நபர் தலைமறைவானார். திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் தனியார் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, லட்சங்களில் பணம் வாங்கியதாகவும், தற்போது அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், திருச்சி குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் 10க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அதில், இதுவரை 40 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை பணம் வாங்கிய முருகேசன், தற்போது தலைமறைவாகி இருப்பதாகவும், அவரை பிடித்து பணத்தை மீட்டுத் தரும்படியும் புகார் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்