போக்குவரத்துறை பணியாளர்கள் தேர்வு : "3 மாதங்களில் தனிக் கொள்கை வகுக்க வேண்டும்" - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் தேர்வு செய்ய, 3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போக்குவரத்துறை பணியாளர்கள் தேர்வு : 3 மாதங்களில் தனிக் கொள்கை வகுக்க வேண்டும் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் தேர்வு செய்ய, 3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை சாமி என்பவர், தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் சசிதரன், பி.டி.ஆஷா அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், அரசு பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், போக்குவரத்து துறையில், பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறையை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த நடைமுறைகளை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை என கூறிய நீதிபதிகள், 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்