24 மணி நேரம் மது விற்பனை : தனியார் உணவகம் முற்றுகை

காங்கேயம் அருகே 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதாகக் கூறி தனியார் உணவகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
24 மணி நேரம் மது விற்பனை : தனியார் உணவகம் முற்றுகை
x
காங்கேயம் அருகே 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதாகக் கூறி தனியார் உணவகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சட்ட விரோதமாக செயல்படும் இந்த கடையை அகற்ற பல முறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கடையால் பள்ளி மாணவர்களும் மதுப் பழக்கத்திற்கு ஆளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த மக்கள், இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உணவகத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்