சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில், கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 9 பேரை, சந்தேகத்தின் பேரில் தனியறைக்கு  அழைத்து சென்று சோதனை நடத்தினர். இதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும், கடத்தல் தொடர்பாக 9 பேரிடமும் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்