முட்டைகளை அடைகாத்த கருநாகம் : பாம்பை பிடித்த வனத்துறையினர் வனப்பகுதியில் விடப்பட்ட பாம்பு
மணப்பாறை அருகே தொட்டியில் முட்டைகளை அடைகாத்த கருநாகத்தை பிடித்த வனத்துறையினர் அதை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.
மணப்பாறை அருகே தொட்டியில் முட்டைகளை அடைகாத்த கருநாகத்தை பிடித்த வனத்துறையினர் அதை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். பொய்கைப்பட்டியில் உள்ள ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கேட்வால்வுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் கருநாகம் ஒன்று இருப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்து பார்த்த போது அது முட்டைகளை அடைகாத்து வந்தது, தெரியவந்தது. இதையடுத்து பாம்பை ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் முட்டைகளையும் மீட்ட வனத்துறையினர் அருகே உள்ள வனப்பகுதியில் சென்று விட்டனர்.
Next Story