பேரூராட்சியின் குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு : அரசு அலுவலகம் முன்பு பசு மற்றும் கன்றுடன் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பசு மற்றும் கன்றுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சியின் குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு : அரசு அலுவலகம் முன்பு பசு மற்றும் கன்றுடன் போராட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே  திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த  சந்திரசேகர், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பசு மற்றும் கன்றுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தனது மாட்டு பண்ணைக்கு அருகே உள்ள பேரூராட்சியின் குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றம்சாட்டும் அவர், இதனால் மாடுகள் நோய் வாய்ப்பட்டு இறப்பதாக வேதனை தெரிவித்தார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் சமரசம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்