திறக்கப்படாத அம்மா குடிநீர் விற்பனை கடை : குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா குடிநீர் விற்பனை கடை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் தாகத்தை தீர்த்து வந்தது.
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா குடிநீர் விற்பனை கடை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் தாகத்தை தீர்த்து வந்தது. இந்த நிலையில், அம்மா குடிநீர் விற்பனை கடை மூன்று மாதங்களுக்கு மேலாக மூடியே கிடப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அம்மா குடிநீர் விற்பனை கடையை உடனடியாக திறந்து, குறைந்த விலையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story