4 வது நாளாக சிகிச்சை பெற்று வரும் ராஜகோபால் : நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் இருப்பதால் மருத்துவர்கள் சிகிச்சை
சாந்தகுமார் கொலை வழக்கில் கைதான ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாந்தகுமார் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் கடந்த 9 ஆம் தேதி சரணடைந்தனர். தொடர்ந்து அவர்கள் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதால் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளார். மேலும் அவருக்கு துறை ரீதியான மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதோடு 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஜனார்த்தனின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படலாம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...
Next Story