மாட்டிறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு...

நாகப்பட்டினம் அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரின் கை வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டிறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு...
x
நாகப்பட்டினம் அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரின் கை வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொரவச்சேரியை சேர்ந்த முகம்மது பைசான் என்பவர், கல்பாக்கம் வந்தபோது, மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். இதை, மிகச் சிறந்த உணவாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர், சொந்த ஊர் சென்ற அவரை, அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. கையில் வெட்டு, முதுகில் அடிபட்ட தழும்பு, தோள் பட்டையில் காயம் ஆகியவற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தப்பியோடிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்து முன்னணியினர் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்