கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது : மீனவர்களின் நாட்டு படகு பறிமுதல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் செந்தாழை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு சென்ற இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் நாட்டு படகையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். காங்கேசன் துறை கடற்படை முகாமில் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story