கோவில்பட்டி : கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

கோவில்பட்டி அருகே நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கோவில்பட்டி : கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
x
கோவில்பட்டி அருகே நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விருதுநகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், கோவில்பட்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக காரில் வந்துள்ளனர். அப்போது துரைசாமிபுரம் என்ற இடத்தின் அருகே, நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த ராஜம்மாள், சரோஜா, ராஜாராம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கார் ஓட்டுநர் சுகன், செல்வலட்சுமி, ராஜ்குமார் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்