ரூ. 6 கோடி பொருட்களுடன் கடை அபகரிப்பு : காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

ரூ. 6 கோடி பொருட்களுடன் கடையை வியாபாரியிடம் அபகரித்த காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்
ரூ. 6 கோடி பொருட்களுடன் கடை அபகரிப்பு : காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்
x
சென்னை பூங்கா நகரைச் சேர்ந்தவர் குமார். முருகா மோல்டிங் ஒர்க்ஸ் என்ற கடை நடத்தி வந்த இவருடன் இணைந்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவு உதவி ஆய்வாளரான இசக்கி பாண்டியன் தங்கத்தில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் தொழில் நஷ்டத்துக்கு உதவுவதாக குமாரிடம் 6 கிலோ தங்கத்தை கொடுத்து, கடையின் ஆவணங்களை பெற்ற இசக்கி பாண்டியன், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுடன் கடையை அபகரித்துக் கொண்டதாக காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், துறை ரீதியான நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் இசக்கி பாண்டியனை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்