திருமங்கலம் : தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் கிராம மக்கள்

திருமங்கலம் அருகே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் : தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் கிராம மக்கள்
x
கள்ளிக்குடி ஊராட்சிக்குட்பட்ட மொச்சிக்குளம் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.​ இங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குளியலறை தொட்டியின் மூலம், மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஓராண்டிற்கு முன்பு குளியலறை தொட்டியில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்காக மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி  மக்கள் தெரிவித்துள்ளனர்.  மின்மோட்டாரை சரிசெய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறும் அவர்கள், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்