வாரிசு அரசியல் குறித்து பேரவையில் அதிமுக - திமுக இடையே கருத்து மோதல்

திமுகவில் வாரிசுகள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும் தாந்தோன்றித்தனமாக பதவிக்கு வரவில்லை என்றும் திமுக கொறடா சக்கரபாணி தெரிவித்தார்.
வாரிசு அரசியல் குறித்து பேரவையில் அதிமுக - திமுக இடையே கருத்து மோதல்
x
சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, மற்ற கட்சிகளை போல் தந்தை, மகன், பேரன் என வாரிசு அரசியலில் அதிமுக ஈடுபடவில்லை என்றார்.இதற்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர் பேசிய திமுக கொறடா சக்கரபாணி வாரிசு அரசியல் என வரும்போது ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்,ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்,ராஜன்செல்லப்பா மகன் ராஜ் சத்யன் ஆகியோரை சுட்டிக்காட்டி இவர்கள் எல்லாம் வாரிசுகள் இல்லையா என கேள்வி எழுப்பினார்.மேலும் ஸ்டாலின் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து கட்சி தலைவராகி இருப்பதாகவும்,பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர் தான்,தற்போது இளைஞரணி செயலாளர் ஆகி இருப்பதாகவும், தான் தோன்றித்தனமாக யாரும் பதவிக்கு வரவில்லை எனவும் பதில் அளித்தார்.தொடர்ந்து திமுகவினர்,அதிமுக உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபடியே இருந்தனர்.பின்னர் பேசிய சபாநாயகர், அதிமுக உறுப்பினர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லைநீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இந்த விவாதம் நடைபெற்ற போது திமுக தலைவர் ஸ்டாலின் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்