10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
x
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 10 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சூரக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் எஸ்.கோவில்பட்டியை சேர்ந்த 10 வயது மாணவி படித்து வந்துள்ளார். இன்று பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவியை, அதேபகுதியை சேர்ந்த குமார் என்பவர் வழிமறித்து, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.  மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அப்பகுதி மக்கள், குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை போலீசார் கைதுசெய்தனர். சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்