ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர கோரிக்கை

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்தி சேலத்தில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர கோரிக்கை
x
பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்தி சேலத்தில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் சேலத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற்று, ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்ப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்