நெல்லை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைதுறை அதிரடி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள புண்ணியவாளன்புரத்தில் நான்கு வழி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள புண்ணியவாளன்புரத்தில் நான்கு வழி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், காவல் துறை உதவியுடன், நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
Next Story