வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபோகம் : ஆண்கள், பெண்கள் மனமுருகி பாடல்களை பாடினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், சீனிவாச பெருமாளுக்கு இன்று திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபோகம் : ஆண்கள், பெண்கள் மனமுருகி பாடல்களை பாடினர்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், சீனிவாச பெருமாளுக்கு இன்று திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பள்ளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் கடந்த வியாழன் அன்று அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  இந்நிலையில் இன்று திருக்கல்யாண வைபோகத்தையொட்டி, பெருமாளுக்கு பால், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பஜனையும் நடத்தப்பட்டது.  இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு, மனமுருகி பாடல்களை பாடினர். மேலும் ஆண்கள் நடனமாடியவாறு பெருமாளை வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்