பலாப்பழங்களை தொடர்ந்து சேதப்படுத்திய கரடி : விவசாயி வைத்த சுருக்கில் சிக்கி கரடி உயிரிழப்பு

நாமக்கல் அருகே கொல்லி மலை பகுதியில் விவசாயிக்கு சொந்தமாக பலாமரத்தில் கரடி ஒன்று பலாப்பழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பலாப்பழங்களை தொடர்ந்து சேதப்படுத்திய கரடி  : விவசாயி வைத்த சுருக்கில் சிக்கி கரடி உயிரிழப்பு
x
நாமக்கல் அருகே கொல்லி மலை பகுதியில் விவசாயிக்கு சொந்தமாக பலாமரத்தில் கரடி ஒன்று பலாப்பழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி, கரடியை பிடிக்க சுருக்கு ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பலாப்பழத்தை சுவைக்க வந்த கரடி, அந்த சுருக்கு கயிற்றில் மாட்டி உயிரிழந்த தாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கரடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு, புதைத்தனர். இந்நிலையில், அந்த விவசாயி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்