ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் : நாமம் இட்டும், திருவோடு ஏந்தியும் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் : நாமம் இட்டும், திருவோடு ஏந்தியும் ஆர்ப்பாட்டம்
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரக் கோரி,  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நெற்றியில் பட்டை நாமம் இட்டும், திருவோடு ஏந்தியும் கோஷங்களை எழுப்பினர். அப்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ஏரிகளை முழுமையாக தூர்வாரவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா மண்டலத்தை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்