வேலூர்: அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலி திருட்டு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் அம்மன் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலி திருட்டு
x
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் அம்மன் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வக்கீல் ஐயர்தோப்பு பகுதியில் உள்ள கோவிலில், மாரியம்மன் மற்றும் காளியம்மன் விக்ரகங்கள் ஒரே கருவறையில் உள்ளன. இங்கு காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பூஜை முடிந்து, கருவறை பூட்டப்படாமல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பூஜைசெய்ய சென்றபோது இருசிலைகளின் கழுத்திலும் இருந்த மூன்று சவரன் தாலி சங்கிலி திருடு போனது தெரியவந்தது. கோவில் தர்மகர்த்தா அளித்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்