திருமுருகன் காந்தியின் 8 மனுக்கள் தள்ளுபடி...

வழக்குகளை ரத்து செய்ய கோரி மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருமுருகன் காந்தியின் 8 மனுக்கள் தள்ளுபடி...
x
வழக்குகளை ரத்து செய்ய கோரி மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காவிரி பிரச்சினை, முகிலனை தேடுதல், ஈழத் தமிழர் நினைவேந்தல் உள்ளிட்ட விவகாரத்தில், தொடர்ந்து திருமுருகன் காந்தி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்துச் செய்யக்கோரி, திருமுருகன் காந்தி, தனித் தனியாக 8 மனுக்கள் தாக்கல் செய்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ், அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். திருமுருகன் காந்தியின் பேச்சும், செயலும் சந்தேகத்துக்கு உரியது என்ற நீதிபதி, அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்