பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு

பவானி ஆற்றில் மீன்பிடித்தபோது ஐம்பொன்னாலான பழங்கால பெருமாள் சிலை சிக்கியது.
பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு
x
ஈரோடு மாவட்டம் அத்தாணி அடுத்த பவானி ஆற்றில், மீன்பிடித்தபோது, ஐம்பொன்னாலான பழங்கால பெருமாள் சிலை சிக்கியது. ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேரின் மீன்பிடி வலையில் சிக்கிய இந்தச் சிலையை, அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் இடத்தில் ஒப்படைத்தனர். 5 கிலோ எடையுள்ள இந்தச் சிலை, பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மிக பழமை வாய்ந்த இந்த சிலையை ஒப்படைத்த இளைஞரை,வருவாய் துறை அதிகாரிகள், பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்