பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கில் ஐம்பொன்சிலை செய்யப்பட்டது -டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம்

பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கத்தில் தான் ஐம்பொன்சிலை செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம் தெரிவித்தார்.
பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கில் ஐம்பொன்சிலை செய்யப்பட்டது -டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம்
x
பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கத்தில் தான், ஐம்பொன்சிலை செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம் தெரிவித்தார். பழனியில் 2 நாட்களாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முகேஷ் ஜெயராம், நவபாஷான சிலையை மாற்ற முதன்முதலில் முயற்சித்தவர் பிரதான குற்றவாளி ஸ்தபதி முத்தையா என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த சதியை செயல்படுத்த முத்தையாவை பின்னின்று இயக்கியவர்கள் யார் யார் என்பது விரைவில் கண்டறியப்படும் என்றும் முகேஷ் ஜெயராம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்