தேனி : கூட்டமாக சுற்றி திரியும் காட்டுயானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்

தேனியை ஒட்டிய கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள காந்தலூர் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
தேனி : கூட்டமாக சுற்றி திரியும் காட்டுயானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
x
தேனியை ஒட்டிய கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள காந்தலூர் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அங்குள்ள வயல்வெளிகளில் யானைகள் புகுந்து வாழை மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சாலையை கடந்து காட்டு யானைகள் ஆட்டோ உள்ளிட்டவற்றை துரத்தி சேதப்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்