கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் கிராம சபை கூட்டம் : காணொலி காட்சி மூலம் 72 கிராம மக்கள் பங்கேற்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கிராம சபை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் கிராம சபை கூட்டம் : காணொலி காட்சி மூலம் 72 கிராம மக்கள் பங்கேற்பு
x
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கிராம சபை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஆண்டுக்கு நான்கு  முறை நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற  கிராம சபை கூட்டங்களில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கமல்ஹாசன் பங்கேற்றார். தமிழகம் முழுவதும் 72 கிராம மக்கள் காணொலி காட்சி மூலம் கமல்ஹாசனுடன் உரையாடி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்