தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் : கைதான 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, கோவையில் முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, கோவையில் முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்ட விரோத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதியிடம், எதிர்தரப்பு அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை, இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Next Story