வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு
x
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். விருத்தாசலத்தை சேர்ந்த இவர்கள், ராமலிங்கம், மகேஸ்வரி மற்றும் பாலு ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பணம் வாங்கியதாகவும், ஆனால் வெளிநாட்டிற்கு அழைத்து சென்ற பின் வேலை கொடுக்காமல், சாப்பாடு போடாமல், அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், ஏமாற்றிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்