மின்சாரம் பழுது பார்க்கும் பணியின் போது விபத்து : மின்சாரம் தாக்கியதில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குறுக்கை பகுதியில் மின்சார பழுது பார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மின்சாரம் பழுது பார்க்கும் பணியின் போது விபத்து : மின்சாரம் தாக்கியதில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
x
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குறுக்கை பகுதியில் மின்சார பழுது பார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் மின் பழுது பார்ப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  ரட்டாலையை சேர்ந்த யாதவ்சிங் என்பவர் மின்கம்பத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு பழுதை சரி செய்துள்ளார்.  அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மின்மாற்றியை திடீரென இயக்கியதால் அவரை மின்சாரம் தாக்கியது. ஆனால்  உடலில் கயிறு கட்டியிருந்ததால் மின் கம்பத்தின் மேலேயே யாதவ் சிங் தொங்கியுள்ளார். இதனையடுத்து அவரை பொதுமக்கள் மீட்டு  சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 





Next Story

மேலும் செய்திகள்