மதுரை : டிராக்டர் மீது சரக்கு லாரி மோதி விபத்து

மதுரை, திருமங்கலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
மதுரை : டிராக்டர் மீது சரக்கு லாரி மோதி விபத்து
x
மதுரை, திருமங்கலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நத்தத்துபட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பரமசிவம், அதே பகுதியை சேர்ந்த மருது ஆகிய இருவரும் மதுரை நோக்கி டிராக்டரில் சென்றுள்ளனர். அப்போது கள்ளிக்குடி அருகே, சிவகாசியில் இருந்து பொரிகடலை ஏற்றி வந்த லாரி, டிராக்டரின் பின்னால் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பரமசிவம், மருது ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட லாரி ஓட்டுநர் அரை மணி நேர போராட்டத்துக்கு மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்