டாஸ்மாக் கடையை மூட மறுக்கிறது அரசு - கனிமொழி எம்.பி

தமிழகத்தில் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
டாஸ்மாக் கடையை மூட மறுக்கிறது அரசு - கனிமொழி எம்.பி
x
தமிழகத்தில் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை  என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கனிமொழி, ரேஷன் கடைகளில் எந்த பொருளும் கிடையாது, ஆனால், டாஸ்மாக் கடையில் எல்லாம் கிடைக்கிறது என விமர்சித்தார். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிய அ.தி.மு.க. அரசு அதை செய்யவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.  பெண்களின் கோரிக்கையை ஏற்று,  டாஸ்மாக் கடையை மூட அரசு மறுக்கிறது என்றும் கனிமொழி குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்