தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர்தான் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

மத்திய அரசை அணுகி தமிழக அரசு நிதியை பெற்று, போர்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர்தான் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்
x
மத்திய அரசை அணுகி தமிழக அரசு நிதியை பெற்று, போர்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான் என்றார்.  தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் என்றும், அதுவரை கூட்டணி பற்றி பேசவோ விவாதம் செய்யவோ அவசியமில்லை என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்