தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி

தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு இருக்காது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி
x
தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டு இருக்காது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.  ஓசூர் அருகே, உத்தனப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தின் சோதனை ஒட்டத்தை தொடக்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழகத்தில் இனி எப்பொழுதும் மின்வெட்டு இருக்காது என்று குறிப்பிட்டார். தமிழகம் தேவைக்கு அதிகமாக  மின் உற்பத்தி செய்கிறது என்றும், இயற்கை சீற்றங்கள் மற்றும் இடர்பாடுகளால் ஏற்படும் மின் தடையை மின்வெட்டு என்று சொல்வது வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.   தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதை தாங்கி கொள்ளாத சில அரசியல்வாதிகள், விவசாய நிலங்களில் மின்பாதை அமைப்பதாக  விவசாயிகளை தூண்டி விட்டு அதனை தடுத்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்