வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு" - திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு - திண்டுக்கல் சீனிவாசன்
x
தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வனத்துறை  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வனவிலங்குகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். வனத்துறைக்கு தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் மரம் கடத்தல் நடைபெறுகின்றது என ஆதாரத்துடன் நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்