கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி : ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் உயிரிழப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்
கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி : ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் உயிரிழப்பு
x
திருச்சி கண்டோன்மென்ட் கஸ்டம்ஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், தனது அண்ணன் வீட்டு விசேஷத்துக்காக மனைவி வினிதா, மகள் ராஜஸ்ரீ, மகன் ராகுல் ஆகியோருடன் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது, மகனை மட்டும் பேருந்தில் அனுப்பி விட்டு 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். கும்பகுடி சாலை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று வேகமாக மோதியதில், ராமச்சந்திரன், வினிதா, ராஜஸ்ரீ 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார், அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதற்கிடையே, கார் ஓட்டுநர் தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்