"குடிநீர் பிரச்சினைக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும்" - திருமாவளவன்
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்டதே குடிநீர் பிரச்சினைக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினார். குடிநீர் பிரச்சினை குறித்து வேடிக்கை பார்க்காமல் மத்திய அரசு உதவ முன்வர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.
Next Story