கொடைக்கானல் அணைகளின் நீர்மட்டம் குறைந்தது...

தென்மேற்கு பருவமழை சிறிது கால தாமதமாக தொடங்கியதால் கொடைக்கானலில் மழை குறைந்துள்ளது.
கொடைக்கானல் அணைகளின் நீர்மட்டம் குறைந்தது...
x
தென்மேற்கு பருவமழை சிறிது கால தாமதமாக தொடங்கியதால் கொடைக்கானலில் மழை குறைந்துள்ளது. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணை மற்றும் புதிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகின்றது. இதன் காரணமாக நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு சுமார் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்ய முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதுடன் பருவ மழையினை எதிர்நோக்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்