காய்ச்சல் காரணமாக 8 காவலர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி

திடீர் காய்ச்சல் காரணமாக 8 காவலர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காய்ச்சல் காரணமாக 8 காவலர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி
x
திடீர் காய்ச்சல் காரணமாக  8 காவலர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை மாவட்டம் கோவைபுதூரில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் நான்காம் அணி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி 6 மாத பயிற்சி பெற்று வருகின்றனர்.  இந்த குழுவில் உள்ள காவலர்களுக்கு திடீரென காய்ச்சல் பரவியது. இதில் 25 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று 15 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 8 பேர் சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்