இளைஞர் தற்கொலை வழக்கில் திருப்பம் : கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது அம்பலம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மகன் இறப்பில் சந்தேகம் என தந்தை கொடுத்த புகாரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளைஞர் தற்கொலை வழக்கில் திருப்பம் : கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது அம்பலம்
x
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஐய்யனார், கடந்த 17ஆம் தேதி கிணற்றில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.  தனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திருட்டு வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து, தனது நண்பருடன் இணைந்து ஐய்யனாரை மது அருந்த அழைத்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள 4 பேரை தேடி வருகின்றனர். மாரிமுத்துவின் மனைவி குறித்து ஐய்யனார் தவறாக பேசியதை அடுத்து அவர் கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்