ஒரு மாதத்துக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்

நாராயணபுரம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
ஒரு மாதத்துக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்
x
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த  நாராயணபுரம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். குடிநீர் விநியோகம்  ஒரு மாதத்துக்கு மேல்  நிறுத்தப்பட்டது குறித்து, புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த மக்கள் காலி குடங்களுடன் திருத்தணி-அம்மையார்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர்.   தகவல் அறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்