"ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் திட்டம்" - சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் புகார்

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது போடப்பட்ட திட்டமான மழைநீர் கால்வாய் திட்டம் இதுவரை முழுமையாக நிறைவு பெறாமல் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு திட்டம் கிடப்பில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் திட்டம் - சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் புகார்
x
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது போடப்பட்ட திட்டமான மழைநீர் கால்வாய் திட்டம் இதுவரை முழுமையாக நிறைவு பெறாமல் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு திட்டம் கிடப்பில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த மழைநீர் கால்வாய் திட்ட பணிக்காக தண்டையார்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில்  பல மாதங்களாகவே மழை நீர் கால்வாய் தோண்டப்பட்ட நிலையில்,  கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்காக போடப்பட்ட திட்டமான மழைநீர் கால்வாய் திட்டம், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டதால், பொது மக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்