காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் : தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்பு

காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் டெல்லியில், இன்று பிற்பகல் தொடங்கியது.
காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் : தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்பு
x
காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் டெல்லியில், இன்று பிற்பகல் தொடங்கியது. குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  தமிழ்நாடு அரசு சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி, தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய 9 புள்ளி19 டிஎம்சி தண்ணீரை கர்நாடக மாநிலம் உடனடியாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தில் கேரளா கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு காவிரி நீர் தொடர்பாக தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்