டி.என்.பி.எல் போட்டிக்கான வீரர்கள் பதிவு இன்று முதல் தொடக்கம்

டிஎன்பிஎல் போட்டியில் சேர விரும்பும் புதிய வீரர்களுக்கான பதிவு இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
டி.என்.பி.எல் போட்டிக்கான வீரர்கள் பதிவு இன்று முதல் தொடக்கம்
x
டிஎன்பிஎல் போட்டியில் சேர விரும்பும் புதிய வீரர்களுக்கான பதிவு இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 4 வது சீசன், ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், போட்டியில் சேர விரும்பும் வீரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் இருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீலை 4ஆம் தேதி  வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்