தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
x
தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காவல்நிலைய எல்லையில்,தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக ரவுடி பினு மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று மாங்காடு போலீசார் ரவுடி பினுவை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதில், கீழே விழுந்த பினுவுக்கு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வண்ணமலர், ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாங்காடு போலீசார், ரவுடி பினுவை புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்