திருப்பூரில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் படுகாயம் : போலீசார் விசாரணை
திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே, பள்ளி முடிந்து வீடு திரும்ப காத்திருந்தபோது, பேருந்து நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், கவுதம் என்ற 11 ஆம் வகுப்பு மாணவரை, அதே வகுப்பில் படிக்கும் பிலால் என்ற மாணவர் கல்லால் தாக்கியதாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த மாணவர் கவுதமுக்கு, மருத்துவ உதவி அளித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story