உயர்மின் கோபுரம் அருகில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு : உயர்நீதிமன்றத்தில் ஈரோடு எம்.பி. பிரமாண பத்திரம் தாக்கல்

உயர் மின் கோபுரத்தின் அடியில் எந்த மின் இணைப்பும் இல்லாமல் மின்காந்த அலைகளால் மனித உடல்களில் மின்சாரம் பாய்வதாக ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்
உயர்மின் கோபுரம் அருகில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு : உயர்நீதிமன்றத்தில் ஈரோடு எம்.பி. பிரமாண பத்திரம் தாக்கல்
x
உயர் மின் கோபுரத்தின் அடியில் எந்த மின் இணைப்பும் இல்லாமல் மின்காந்த அலைகளால் மனித உடல்களில் மின்சாரம் பாய்வதாக ஈரோடு தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி சென்னை  உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். உயர்மின் கோபுரம் அருகில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, அந்த  திட்டத்துக்கு தடை விதிக்க கோரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தைச்  சேர்ந்த 8 விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஈரோடு தொகுதி எம்.பி., கணேசமூர்த்தி சார்பில் இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்