இரு சக்கரவாகனத்தின் மீது லாரி மோதி விபத்து : ஹெல்மெட் அணியாமல் சென்ற மாணவன் உயிரிழப்பு
சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் அவர் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி லாரி மோதியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் ஜீவானந்தம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் அவர் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி லாரி மோதியுள்ளது தலையில் அடிபட்ட ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவர் விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.
Next Story